‘டித்வா’ புயலைத் தொடர்ந்து பேரழிவுக்குப் பின்னரான மீட்பு, புனர்வாழ்வு மற்றும் புனரமைப்புப் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக ‘Rebuilding Sri Lanka’ ஜனாதிபதி செயலணியை நிறுவி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க 31.12.2025 அன்று மாலை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.
குறித்த செயலணியில், பிரதமர் ஹரிணி அமரசூரிய உள்ளிட்ட 25 பேர் கொண்ட குழுவை இச் செயலணி உள்ளடக்கியுள்ளது.
இலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 33 ஆவது உறுப்புரையின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இச் செயலணி நிறுவப்பட்டுள்ளது.
வர்த்தமானியை பார்வையிட இங்கே அழுத்தவும்👈


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










