‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு ஒரு நாள் சம்பளத்தை அன்பளிப்பாக வழங்கிய முப்படைகளின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தவும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும் ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை இராணுவம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை விமானப்படையின் அனைத்து தரநிலை உத்தியோகஸ்தர்களும் தங்களது ஒருநாள் சம்பளத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

அதன்படி, முப்படைகளால் நன்கொடையாக வழங்கப்பட்ட தொகை 372,776,918.28 ரூபாவாகும்.

இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவினால் 250 மில்லியன் ரூபாவும், கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் காஞ்சன பனகொடவினால் 73,963,879.71 ரூபாவும், விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வாசு பந்து எதிரிசிங்கவினால் 48,813,038.97 ரூபாவும்

கையளிக்கப்பட்டதோடு இதற்கான காசோலைகள் 31.12.2025 அன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகோந்தாவும் கலந்து கொண்டார்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects