6-13 ஆம் தரங்களுக்கான கல்வியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான செயலணியின் இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு தொடர்பான பணிக்குழுவிற்கும் (Work Group) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிற்கும் இடையிலான கலந்துரையாடலொன்று 06.01.2026 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலின் போது பாடசாலை மாணவர்களுக்கான கலைத்திட்டங்களைத் தயாரித்தல், பாடப்புத்தகங்களைத் தயாரித்தல் மற்றும் அவற்றை மீளாய்வு செய்யும் அதிகாரிகளுக்காக இணையவழிப் பாதுகாப்பு, டிஜிட்டல் நன்னடத்தை மற்றும் சைபர் பாதுகாப்பு (Online Safety, Digital Wellbeing, Cyber Security) தொடர்பான வழிகாட்டிக் கோவையொன்றைத் (Manual of Guidelines) தயாரிக்குமாறு இதன்போது சம்பந்தப்பட்ட பணிக்குழுவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
(பிரதமர் ஊடகப் பிரிவு)






![]()










