“க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தின் கீழ், காலி மீன்பிடி துறைமுகத்தில் சுத்தம் செய்யும் திட்டத்திற்கு 24.01.2026 அன்று கடற்படையின் சமூக பங்களிப்பு வழங்கப்பட்டது.
“ஒரு வளமான நாடு – ஒரு அழகான வாழ்க்கை” என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் “க்ளீன் ஶ்ரீ லங்கா” தேசிய திட்டத்தை செயல்படுத்த நிறுவப்பட்ட ஜனாதிபதி பணிக்குழுவில் இலங்கை கடற்படை ஒரு முக்கிய பங்காளியாகும்.
இந்த நிகழ்வில் , கடற்படையினர், ஏனைய தரப்பினருடன் இணைந்து, காலி மீன்பிடி துறைமுகப் பகுதியில் குவிந்திருந்த குப்பைகளை அகற்றி, துறைமுகப் பகுதியை சுத்தம் செய்வதில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.











இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










