மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக பிராந்திய வான்பரப்பு பகுதியளவில் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது வான்பரப்பு மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து ஐக்கிய அரபு அமீரகம் விமான சேவை தனது செயல்பாடுகளைக் கவனமாக ஆரம்பித்துள்ளது.
பாதுகாப்பு நிலவரங்களைக் கருத்திற்கொண்டு மறு அறிவித்தல் வரை மட்டுப்படுத்தப்பட்ட விமான அட்டவணையின் கீழேயே சேவைகள் முன்னெடுக்கப்படும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
டுபாய் முனையத்திலிருந்து புறப்படும் மற்றும் வருகை தரும் வகையில் ஐக்கிய அரபு அமீரகம் விமான சேவை100-க்கும் மேற்பட்ட விமானங்கள் 05.03.2026 அன்று மற்றும் இன்று (06.03.2026) ஆகிய நாட்களில் இயக்கப்படுகின்றன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










