டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இலங்கை ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் 582,786.18 ரூபா நிதி நன்கொடை அளித்தனர்.
இந் நிகழ்வில் இலங்கை ஒலிம்பிக் வீரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி ஸ்ரீயானி குலவன்ச, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவிடம் இதற்கான காசோலையை அண்மையில் கையளித்ததுடன், நிம்மி டி சொய்சா, சுனில் குணவர்தன, நிலுகா மற்றும் கயில் அபேசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










