மட்டு. மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் சிறுதுளி நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில் கடமை புரியும் உத்தியோகத்தர்களிடையே காணப்படும் திறமைகளை வெளிக்கொணரும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சிறுதுளி நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று முன்னைநாள் பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயத்தினால் உருவாக்கப்பட்டு செயற்பட்டு வந்து இரண்டு வருடங்களாக தடைப்பட்டிருந்தது, அதற்கு புத்துயிர் கொடுக்கும் வண்ணம் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷின் வழிகாட்டலில் உதவிப் பிரதேச செயலாளரினால் கலை கலாசார விழுமியங்களை மீட்டெடுத்து இலைமறை காய்களாய் இருக்கும் அனைத்து திறமைகளையும் மேடைக்கு கொண்டு வரவேண்டும் எனும் தீராத கண்டிப்புடனான முயற்சியினால் இந்நிகழ்வு மீண்டும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் தெட்சணகௌரி தினேஷ், உதவிப் பிரதேச செயலாளர் இளம்குமுதன், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் சுதர்ஷன், நிருவாக உத்தியோகத்தர் தவேந்திரன் மற்றும் பிரதேச செயலக கலைஞர்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நிருவாகக் கிளை உத்தியோகத்தர்களின் வரவேற்பு நடனத்துடன் ஆரம்பமான நிகழ்வில் உத்தியோகத்தர்களின் பல இசைநிகழ்வுகளும் இடம்பெற்றன. நிகழ்வில் பல உத்தியோகத்தர்களின் திறமைகள் வெளிக்கொணரப்பட்டதுடன் இதில் பல உத்தியோகத்தர்களின் கன்னி முயற்சியும் இடம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர்களின் உரை நிகழ்த்தப்பட்டது.

இந்நிகழ்வுகள் மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் எனவும் உழைத்து ஓய்ந்து களைத்த ஊழியர்களின் மன சந்தோசத்திற்காகவும் புத்துணர்வு ஊட்டும் வண்ணமும் கலை இலக்கிய இசை நடன நாட்டார் வழக்கு கதைகூறல் போன்ற அனைத்தையும் அடங்கியதாக அமையவேண்டும். நிகழ்வுகளின் தன்மையை பொறுத்து நேர ஒதுக்கீட்டை அமைத்துக்கொள்வதாகவும் இன்னும் கன்னி முயற்சியாளர்களின் முயற்சியும் வெளிக்கொணரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects