ஏப்ரல் 02 முதல் அரச ஊழியர்களின் வருடாந்த அனைத்து இடமாற்றங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – அரச சேவை ஆணைக்குழு

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2026 ஆம் ஆண்டுக்காக அரச சேவை ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட அனைத்து இடமாற்றங்களும் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இடமாற்றங்கள் அமுலாகும் திகதி குறிப்பிடப்படாத அனைத்து இடமாற்ற உத்தரவுகளும், குறித்த திகதியிலிருந்தே நடைமுறைக்கு வர வேண்டும் என ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இடமாற்றங்கள் தொடர்பாக சமர்ப்பிக்கப்பட்டிருந்த மேன்முறையீடுகள் மீதான தீர்மானங்கள் தற்போது அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன. இத் தீர்மானங்களை அரச சேவை ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பார்வையிட முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2026 வருடாந்த இடமாற்ற உத்தரவுகளைப் பெற்றுள்ள அனைத்து அதிகாரிகளும் குறித்த திகதியில் தமது புதிய சேவை நிலையங்களில் கடமைகளைப் பொறுப்பேற்க வேண்டும் என அரச சேவை ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

மேலும், அரச சேவை ஆணைக்குழுவினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட இடமாற்றங்கள் தொடர்பாக இனிவரும் காலங்களில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் அல்லது பரிந்துரைகள் மீண்டும் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects