மட்டக்களப்பு உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனைக்கண்காட்சி புதிய மாவட்ட செயலக வளாகத்தில் 26.03.2026 அன்று நடைபெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜின் வழிகாட்டுதலின் கீழ் பிரதேச மட்ட சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்தி பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் முகமாக தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் மாவட்ட இணைப்பாளர் எஸ்.சிவகுமாரியின் நடைபெற்றது.
இக்கண்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் விற்பனை கண்காட்சியை பார்வையிட வந்ததுடன் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் பொருட்களை கொள்வனவு செய்தனர்.
இப் பிரதேசத்தில் உள்ள சிறு தொழில் முயற்சியாளர்களை வலுப்படுத்துவதற்கு மாவட்ட செயலகத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னேடுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.












இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










