2026 ஆம் ஆண்டு இதுவரை நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தற்போது 700,000 த்தை எட்டியுள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து 22 ஆம் திகதி நிலவரப்படி, 692,744 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் இதுவரை 136,089 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 229,298 ஆக இருந்தது.
இருப்பினும், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றநிலை காரணமாக, இந்த மாதம் சுற்றுலாப் பயணிகளின் வருகையில் சரிவு எதிர்பார்க்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










