ஒரு வணிக நிறுவனத்தின் கீழ் இயங்கும் எத்தனை வாகனங்களாக இருந்தாலும், அவை அனைத்திற்கும் அந்த நிறுவனத்தின் பெயரிலான ஒரே கணக்கின் (Single Profile) கீழ் புதிய எரிபொருள் ஒதுக்கீட்டுடன் கூடிய QR குறியீடுகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் பல வாகனங்களை முகாமைத்துவம் செய்யும் நிறுவனங்களுக்குப் பெரும் சுமை குறைக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் QR குறியீட்டு முறைமையின் கீழ் இதுவரை சுமார் 6.4 மில்லியன் பயனாளர்கள் இக்கட்டமைப்பில் இணைந்துள்ளனர்.
இதில் 2.8 மில்லியன் வாகனங்கள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்னும் சுமார் 100,000 பயனாளர்கள் மாத்திரமே இக்கட்டமைப்பில் இணைய வேண்டியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்தத் திட்டம் எரிபொருள் விநியோகத்தை முறைப்படுத்துவதோடு, வர்த்தகத் துறையினருக்குத் தடையற்ற சேவையை வழங்க உதவும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










