விடுமுறை நாட்களிலும் திறக்கப்படும் கமநல சேவை நிலையங்கள்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறு போக நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு உரங்களை விநியோகிப்பதற்காக, கமநல சேவை நிலையங்கள் விடுமுறை நாட்களிலும் திறந்திருக்கும் என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக அந்தத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தம்மிக ரணதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அனைத்து விடுமுறை நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள கமநல சேவை நிலையங்களைத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உர விநியோகத்தில் ஏற்படக்கூடிய தடைகள் மற்றும் பல்வேறு தரப்பினர் உரங்களை சேமித்து வைக்க முயற்சிப்பதைக் கருத்திற்கொண்டு, நெற்செய்கைக்குத் தேவையான உரங்களை அரசாங்க கமநல சேவை நிலையங்கள் ஊடாக மாத்திரம் விநியோகிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, யல பருவச் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தற்போது விவசாய சேவை நிலையங்கள் ஊடாக உர விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு, 50 கிலோ கிராம் யூரியா உர மூடை ஒன்று 9,900 – 10,200 ரூபா இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுவதாகவும் விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects