இலங்கையின் கரும்புச் செய்கையை மேம்படுத்த பிரேசிலின் தொழில்நுட்ப உதவி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உள்நாட்டு கரும்புச் செய்கையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் சவால்களை வெற்றிகொள்வதற்காக, சர்வதேச தொழில்நுட்ப ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதன் அவசியத்தை இனங்கண்டு ‘இலங்கையின் கரும்புத் திட்டம்’ (Sugarcane Project of Sri Lanka) என்ற பெயரில் புதிய திட்டமொன்றை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கையின் கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சு, கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் தேசிய அறிவியல் அறக்கட்டளை (NSF) ஆகியவற்றுடன், பிரேசிலின் ‘பிரேசிலிய ஒத்துழைப்பு முகவரகம்’ மற்றும் ‘சாவோ கார்லோஸ் பெடரல் பல்கலைக்கழகம்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து இத்திட்டத்தை வடிவமைத்துள்ளன.

தற்போது நாட்டின் மொத்த சர்க்கரை தேவையில் 90% இறக்குமதி செய்யப்படுவதுடன், இதற்காக பெருமளவு வெளிநாட்டு நாணயம் செலவிடப்படுகிறது.


கரும்பு உற்பத்தியில் உலகளவில் முன்னணியில் திகழும் பிரேசிலின் நிபுணத்துவம் மற்றும் அனுபவங்களை இத்திட்டத்தின் மூலம் இலங்கைக்கு பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம்:

இலங்கையின் கரும்பு விளைச்சல் மற்றும் சர்க்கரை உற்பத்தியை அதிகரித்தல்,
பயிற்சி மற்றும் அறிவுப் பகிர்வு மூலம் பங்குதாரர்களின் தொழில்நுட்ப திறனை மேம்படுத்தல்,
மதிப்பு கூட்டப்பட்ட மற்றும் பக்கவிளைவுப் பொருட்களை (By-products) திறம்பட பயன்படுத்துவதை ஊக்குவித்தல்,
சர்க்கரை உற்பத்தித் துறையில் நிறுவன ரீதியான திறனை வலுப்படுத்துதல் ஆகியன இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த 2008 ஆம் ஆண்டில் கையெழுத்திடப்பட்ட தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்த கட்டமைப்பின் கீழ், முன்மொழியப்பட்டுள்ள இத்திட்டத்தை 36 மாத காலத்திற்குள் (3 வருடங்கள்) நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects