மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 212 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கல்லூரியின் 2005 உயர்தரப் பிரிவில் கல்வி கற்ற மாணவர்களின் ஏற்பாட்டில் 13 ஆவது தடவையாக இரத்ததான முகாம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
இவ் இரத்ததான முகாமானது மெதடிஸ்த மத்திய கல்லூரியின் கார்ட்மன் மண்டபத்தில் 13.06.2026 அன்று காலை 9.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
ஒருமுறை இரத்ததானம் செய்வது மூன்று உயிர்களைக் காப்பாற்றும் எனும் அடிப்படையில் இவ் உயிர்காக்கும் பணியில் இணைந்து கொள்ள கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள், தகுதியுள்ள தானம் செய்பவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், நலன் விரும்பிகள் மற்றும் சமூக உறுப்பினர்கள் என அனைவரையும் அழைக்கின்றனர்.
இரத்த தானம் செய்யுங்கள். நம்பிக்கையைப் பரப்புங்கள். உயிர்களைக் காப்பாற்றுங்கள் எனும் தொனிப்பொருளில் இவ் இரத்த தான முகாம் நடைபெறவுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










