‘அஸ்வெசும’ ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவு குறித்து வெளியான செய்தி!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாத்திற்குரிய கொடுப்பனவுகளை இன்று (18.06.2026) வழங்குவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்காக 10,904,801,250.00 ரூபாய் பணம் நாளை சம்பந்தப்பட்ட பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வைப்புச் செய்யப்படவுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர, இக்கொடுப்பனவு நடவடிக்கைகள் ‘அஸ்வெசும’ முதற்கட்ட பயனாளிகளுக்காக மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இன்று முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது ‘அஸ்வெசும’ வங்கி கணக்குகள் ஊடாக இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects