இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையை வலுப்படுத்தும் நோக்கில், 104 ‘FOTON மெட்ரோ பேருந்துகள் ‘ நாட்டுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இந்த பேருந்துகள் கையளிக்கப்படும் நிகழ்வு சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள FOTON நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது.
இதில் ‘லங்கா மெட்ரோ டிரான்சிட்’ நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
லங்கா மெட்ரோ டிரான்சிட் நிறுவனத்தினர் தெரிவிக்கையில், நாடு முழுவதும் நவீன, பாதுகாப்பான மற்றும் வசதியான பொதுப் போக்குவரத்துச் சேவைகளை மேம்படுத்துவதில் இந்த பஸ்கள் பங்களிக்கும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிடுகிறது.
இந்த பேருந்துகளின் வருகையானது, இலங்கையின் பொதுப் போக்குவரத்துத் துறையின் வளர்ச்சியில் மற்றுமொரு முக்கிய மைல்கல் என விவரித்துள்ள அந்நிறுவனம், பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதற்காக அனைத்து பங்குதாரர்களுடனும் இணைந்து பணியாற்ற எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.






இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










