அஸ்வெசும கொடுப்பனவு குறித்து வெளியான அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இனி வரும் காலங்களில் ஏழை மற்றும் மிகுந்த வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு மட்டுமே அஸ்வெசும நலத்திட்டத்தின் மூலமான உதவித்தொகை, வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. 

அஸ்வெசும நலத்திட்டமானது 2023 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது. 

இதற்கான தரவுகளை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன. 

2023 ஆம் ஆண்டில், 4 பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் மக்கள் குறித்த உதவித்தொகையை பெற்றனர். 

மேலும், ஏப்ரல் 2025 இல், நான்காவது பிரிவான இடைக்காலப் பிரிவில் இருந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டன. 

இந் நிலையில் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல், மூன்றாவது பிரிவான நலிவடைந்த மக்களில் 425,000 பயனாளிகளுக்கான நிவாரண உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த இரண்டு பிரிவுகளில் ஏழையாகவோ அல்லது கடும் வறுமையில் உள்ள குடும்பங்களோ இருந்தால், அவர்கள் மறு குடியமர்வு உதவித்தொகையைப் பெற முடியும் என்று நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அஷான் தர்ஷக தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects