5G வெளியீடு மற்றும் சைபர் பாதுகாப்பு குறித்து MWC மாநாட்டில் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர், மொபைல் தகவல் தொடர்பு சங்கத்தின் (GSMA) சிரேஷ்ட அதிகாரிகளுடன் 25.06.2026 அன்று நடைபெற்ற MWC GSMA வட்டமேசை மாநாட்டின் பக்கவகையில் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியதுடன், இலங்கையின் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் நிகழ்ச்சி நிரலை மேம்படுத்துவது குறித்த ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டார்.

இந்த தூதுக்குழுவில் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் பந்துல ஹேரத் ஆகியோர் கலந்துகொண்டதுடன், GSMA அமைப்பின் சார்பில் பொதுக் கொள்கை மற்றும் பொது விவகாரத் தலைவர் (APAC) திருமதி ஜெனட் வைட், கொள்கை பணிப்பாளர் (APAC) பென்சன் கோ மற்றும் அலைக்கற்றை மற்றும் கொள்கை பணிப்பாளர் (தெற்காசியா) ஆஷிஷ் கார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 5G வெளியீட்டு உத்தி, 5G சேவைப் பயன்பாட்டு வழிமுறைகளைக் கண்டறிதல், ஒருங்கிணைந்த உரிமம், தொழில்நுட்ப நடுநிலைமை, உள்கட்டமைப்புப் பகிர்வு மற்றும் சைபர் பாதுகாப்பு ஆகியவற்றில் இக்கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தின.

இந்த சந்திப்பில் டிஜிட்டல் சுவிட்ச்ஓவர் மற்றும் உலக வானொலித்தொடர்பு மாநாடு 2027 (WRC-27) க்கான தயாரிப்புகள் குறித்து TRCSL உடன் சமீபத்திய ஈடுபாடுகள், அத்துடன் GSMA APAC குறுக்கு துறை மோசடி எதிர்ப்பு பணிக்குழு (ACAST) பற்றிய புதுப்பிப்புகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இலங்கையின் டிஜிட்டல் உருமாற்ற அபிலாஷைகள் மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் பரந்த முன்னுரிமைகளுக்கு ஆதரவாக தொடர்ச்சியான ஒத்துழைப்பை வளர்ப்பதற்கான தங்களின் அர்ப்பணிப்பை இரு தரப்பினரும் மீண்டும் உறுதிப்படுத்தினர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects