இலங்கை – பாகிஸ்தான் விமான சேவைகள், கடல்சார் ஒத்துழைப்பு, மேம்பாடு குறித்து கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான விமான மற்றும் துறைமுகத்துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்த உத்தியோகபூர்வ சந்திப்பொன்று, துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து மற்றும் எரிசக்தி அமைச்சர் அனுர கருணாதிலக மற்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வுபெற்ற) முஹம்மது அலி தலைமையிலான தூதுக்குழுவினருக்கு இடையில் 02.07.2026 அன்று துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் நீண்டகால நட்பு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்துவது குறித்து விரிவாக கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

இக்கலந்துரையாடலில், விமான போக்குவரத்துத் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இரு நாடுகளுக்கும் இடையிலான விமான தொடர்புகளை மேம்படுத்துதல், விமான பயணங்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் இத்துறையின் எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன் துறைமுக மற்றும் கடல்சார் துறையில் இரு நாடுகளுக்கும் இடையே அறிவு மற்றும் அனுபவங்களை பரிமாறிக்கொள்வது மற்றும் செயல்பாட்டுத் திறனை அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

மேலும், பிராந்திய போக்குவரத்து மற்றும் தளபாடங்கள் மையமாக இலங்கையை மேலும் வலுப்படுத்துவதற்காக, துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து துறைகளில் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்தும் இருதரப்பிலும் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

இந்த சந்திப்பில், பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, இலங்கை சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல மற்றும் இருதரப்பு சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects