அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காகப் பயன்படுத்துவதைத் தடைசெய்து முன்னதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் இரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை நுகர்வோர் விவகார அதிகாரசபை தற்போது வெளியிட்டுள்ளது.
இதன்படி, அரிசி அல்லது நெல்லை கால்நடைத் தீவன உற்பத்திக்காக நேரடியாகப் பயன்படுத்துவதற்கோ அல்லது வேறு ஏதேனும் வகையில் கால்நடைத் தீவன உற்பத்திக்கான மூலப்பொருளாகப் பயன்படுத்துவதற்கோ, விற்பனை செய்வதற்கோ, விற்பனைக்காக காட்சிப்படுத்துவதற்கோ, களஞ்சியப்படுத்துவதற்கோ, கொண்டு செல்வதற்கோ, விநியோகிப்பதற்கோ அல்லது கொள்வனவு செய்வதற்கோ மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு கடந்த ஜூன் 24ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.




இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










