ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் களனிப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தராக பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி அலுவலகத்தில் 22.08.2026 அன்று முற்பகல் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமானாயக்கவினால் அவரிடம் கையளிக்கப்பட்டது.
பேராசிரியர் என்.டி. பெர்னாண்டோ, மக்கள் வங்கியின் தலைவராக பணியாற்றியுள்ளதுடன், இதுவரை களனிப் பல்கலைக்கழகத்தில் நிதியியல் பிரிவின் பேராசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.
இந் நியமனமானது இன்று (24.08.2026) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளது.
(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()








