தேர்தல்கள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் 16 வயதுக்கு மேற்பட்ட பிரஜைகளை தேருநர் இடாப்பில் பதிவு செய்வது தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வுகள் மட்டக்களப்பு மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் எம்.வீ.எம்.சுபியான் தலைமையில் தனியார் கற்கை நிலையத்தில் 01.02.2024 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீரத்நாயக்க , மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதன் போது மாணவர்களுக்கு வாக்களித்தலின் பலத்தையும் அதன் தாற்பரியம் தொடர்பாக அதிதிகளினால் மாணவர்களுக்கு விபரிக்கப்பட்டது.
மேலும் ஈ சேவையூடாக தேடுநர் இடாப்பிற்குள் பெயரை உட்சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெற்றுக் கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










