கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்துக்கு அருகில் தொடருந்து வழித்தடத்தை மாற்றும் கட்டமைப்பில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து மருதானை திசையாக பயணிக்கும் சகல புகையிரதங்களும் தாமதமாக புறப்படக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த தொழில்நுட்ப கோளாறினை சீரமைக்கும் பணிகள் தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










