உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து நடைபெற்ற கலந்துரையாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு ஒரு கோடியே 72 இலட்சத்து 96 ஆயிரத்து 330 பேர் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள 336 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பில் 08.03.2025 அன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மாவட்ட தேர்தல் ஆணையாளர்கள், துணை மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள் இக் கலந்துரையாடலில் கலந்துகொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலந்துரையாடலின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

4,872 வட்டாரங்களுக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இத் தேர்தல் நடாத்தப்படவுள்ளது.

எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் 08.03.2025 அன்று கலந்துரையாடப்பட்டதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects