நாட்டின் தபால் துறையை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு சென்று அதன் வருவாயை அதிகரிக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் புதிய திட்டமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில், முத்திரை ஊக்குவிப்பு திட்டமொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்&
இதன்படி, எதிர்வரும் 10 வருடங்களை இலக்காக் கொண்டு இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் , நாடளாவியரீதியில் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் வளங்கள் மற்றும் வசதிகளை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










