சருமம் பொலிவுடன் இருக்க வேண்டுமா ?
சருமம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்றால் மஞ்சள், சந்தனம் மற்றும் முல்தானிமெட்டி ஆகியவற்றைக் கலந்து, தினமும் இரு தடவைகள் சருமத்தில் பூசி வந்தால் சருமம் பொலிவுடன் இருக்கும்.
முகத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதற்கு கரட் சாறு, பப்பாளி அல்லது வெள்ளரிக்காய் சாறு ஆகியவற்றை முகத்தில் பயன்படுத்துவது மிகவும் நல்லது.
கரட் , பப்பாளி மற்றும் வெள்ளரிக்காய் ஆகியவற்றில் விற்றமின் சி ஊட்டச்சத்து அதிகம் உள்ளதால் அது முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி பொலிவைத் தரும்.
முகப்பருக்கள் குறைவதற்கு பாசிப்பயறு மா , மஞ்சள், சந்தனம் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது. இதனால் முகம் மிக பளபளப்பாக இருக்கும்.
தினமும் அதிகளவில் தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள அழுக்குகள் நீங்கி முகம் பளபளப்பாகவும் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
வறண்ட சருமப் பகுதிகளில் கற்றாழை ஜெல்லை பூசி வந்தால் விரைவில் மாற்றத்தைக்காண முடியும். கற்றாழையில் உள்ள ஜெல் சருமத்திற்கு மிகவும் நன்மை தரும்.
முடி உதிர்வு, முடி அடர்த்தியின்மை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் கற்றாழை ஜெல்லை பயன்படுத்த முடியும்.
தினமும் பலவகை விற்றமின்கள் அடங்கிய பழங்கள் மற்றும் காய்கறிகளை உண்பதால் சருமம் ஆரோக்கியமாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










