2025 ஆண்டில் இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை 2.2 மில்லியனைத் தாண்டியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதிகார சபையின் கூற்றுப்படி, டிசம்பர் 15 ஆம் திகதி வரை மொத்தம் 2,208,000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.
இது சுற்றுலாத் துறையில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
அண்மைய வாரங்களில் வானிலை தொடர்பான இடையூறுகள் இருந்தபோதிலும், இறுதி காலாண்டில் தொடர்ந்து வந்த சுற்றுலாப் பயணிகள் ஒட்டுமொத்த செயல்திறனுக்கு கணிசமாகப் பங்களித்துள்ளனர் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










