பொதுத்துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றம் மற்றும் செயற்கை நுண்ணறிவு கைபேசி செயலி ஒருங்கமைப்பிற்கு பயிற்சி செயலமர்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பொதுத்துறையில் பணிப்பாய்ச்சலை உருமாற்றுதல் மற்றும் செயற்கை நுண்ணறிவை கைபேசி செயலி ஒருங்கமைப்பு தொடர்பான ஒரு நாள் பயிற்சி செயலமர்வு பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.03.2025 அன்று இடம் பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரனின் வழிகாட்டுதலின் கீழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்ஷினி ஶ்ரீகாந்தின் மேற்பார்வையில் நா.விஜயதாஸின் ஒருங்கமைப்பின் கீழ் இடம் பெற்ற பயிற்சி செயலமர்வில் போரதீவுப்பற்று உதவிப் பிரதேச செயலாளர் வி.துலாஞ்சனன் வளவாளராக கலந்து கொண்டார்.

அரச சேவைகளின் போது செயற்கை நுண்ணறிவுகளை பயன்படுத்தி  வினைத்திறனான சேவைகளை வழங்குவதற்கு தேவையான ஆலோசனைகள் இதன் போது வழங்கப்பட்டது.

மேலும் எமது நாட்டின் பொதுத் துறையில் எவ்வாறான நுண்ணறிவுகளை பயன்படுத்துவது தொடர்பான விளக்கங்கள் வழங்கப்பட்டதுடன் இடர் முகாமைத்துவம், வாகன நெரிசல் கண்காணிப்பு முகாமைத்துவம், நோய் இனங்காணல், ஆட்களை இனங்காணல் போன்ற பலவிடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects