இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிந்துதுர்க் மாவட்டத்தின் தேவ்பாக் கடற்கரைக்கு அருகில் சீகல் தீவு அமைந்துள்ளது.
இது இந்தியாவின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
இந்த தீவானது தினமும் 30 நிமிடங்கள் மட்டுமே தோன்றும். கடல் அலைகள் குறையும் போதே இந்த தீவு தோன்றும்.
சீகல் என்பது கடலில் வாழும் ஒரு பறவை இனம் ஆகும். இந்த தீவுக்கு சீகல் பறவைகள் அதிகம் வருவதால் இப்பெயர் வழங்கப்பட்டுள்ளது.
சீகல் தீவுக்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகள் அங்குள்ள மீன்களை பிடிப்பது வழக்கம்.
இந்த தீவானது பெரும்பாலான நாட்களில் அரபிக்கடலுக்கு அடியில் மறைந்திருக்கும்.
இது இயற்கை ஆர்வலர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பறவை ஆர்வலர்களை அதிகம் ஈர்க்க கூடிய இடமாகும்.
கடல் அலைகள் குறையும் போது 30 நிமிடங்கள் மட்டுமே சீகல் தீவை பார்க்க முடியும் என்பதால் அங்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள் நேரத்தை சரிபார்ப்பது அவசியமாகும்.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










