அதிக வருமானத்தை ஈட்டியுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களுக்கு திரும்புவதற்காக விசேட பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தேசிய போக்குவரத்துச் சபையின் போக்குவரத்து பிரிவு முகாமையாளர் எச் ஜயதிலக தெரிவித்தார்.

தற்போது 24 மணிநேரமும் பேருந்து சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கண்டி தலதா மாளிகையின் ‘ஸ்ரீ தலதா வழிபாட்டு’ நிகழ்வுக்காக செல்லும் மக்களின் நலன் கருதி விசேட பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், கண்டி-கொழும்பு வீதியில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 150 பேருந்துகள் சேவையில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த 10 ஆம் திகதி முதல் 20.04.2025 அன்று வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்துச் சபை சுமார் 1,300 மில்லியன் ரூபாவை ஈட்டியுள்ளதாகவும்,

இந்த வருமானம் எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects