ஒன்பது மாவட்டங்களின் விவசாயிகளுக்கான உர மானிய நிதி இன்று வங்கிக் கணக்குகளில்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

சிறுபோகத்துக்காக ஒன்பது மாவட்டங்களின் விவசாயிகளுக்குத் தேவையான உர மானிய நிதி இன்று அவர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படவுள்ளது.

விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் ரோஹன ராஜபக்ச இதனைத் தெரிவித்துள்ளார்.

இதற்காக 120 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறுபோக நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் அனைவரும், எலிக்காய்ச்சல் தடுப்பு மருந்துகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியது கட்டாயம் என்று சுகாதார அமைச்சகம் வலியுறுத்துகிறது.

குறித்த மருந்தினை உள்ளூர் பொது சுகாதார ஆய்வாளர் அல்லது சுகாதார மருத்துவ அதிகாரி அலுவலகத்திடமிருந்து மருந்துகளை இலவசமாகப் பெறலாம் என்று தொற்றுநோயியல் பிரிவின் நிபுணர் வைத்தியர் துஷானி தபரேரா தெரிவித்தார்.

தொடர்ந்து மழை பெய்யும் வானிலை மற்றும் சிறுபோகத்தில் நெல் சாகுபடி தொடங்குவதால், எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 3,000 க்கும் மேற்பட்ட எலிக்காய்ச்சல் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects