உலக வங்கி குழுமத்தின் தலைவர் அஜய் பங்கா, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அழைப்பை ஏற்று, இன்று (07.05.2025) இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
சுமார் இரு தசாப்தங்களுக்கு பின்னர் உலக வங்கி தலைவர் ஒருவரின் முதல் இலங்கை விஜயம் இதுவாகும்.
உலக வங்கி இது தொடர்பில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளதுடன் உலக வங்கியின் தலைவர் இலங்கை அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விஜயத்தின் போது நாட்டின் பொருளாதாரத்தை மேலும் பலப்படுத்துவது, தனியார் பிரிவின் எதிர்காலம் போன்ற விடயங்கள் தொடர்பில் உலக வங்கியின் தலைவருடன் கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










