தேசிய வரி வாரம் இன்று (02.06.2025) முதல் ஆரம்பமாகிறது.
இதன் ஆரம்ப நிகழ்வு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
வரி சக்தி என்ற பெயரில் வரி வாரத்தை செயற்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரையான வாரத்தில் வரி செலுத்துதல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே.எஸ்.சாந்த தெரிவித்தார்.
வரி செலுத்துவோரின் ஒவ்வொரு சதமும் பாதுகாக்கப்படும் எனவும், நாட்டில் உள்ள கறுப்பு பொருளாதாரம் ஒழிக்கப்படும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.



















இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










