2025 ஆம் ஆண்டுக்கான பொசன் பண்டிகைக்காக அனுராதபுரத்திற்கு வரும் பக்தர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இத் திட்டம் முதன்மையாக மிஹிந்தலை மற்றும் அட்டமஸ்தானாவில் செயல்படுத்தப்படுவதாகவும், இதற்காக 8,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பொலிஸ் உயிர்காக்கும் குழுக்கள், போக்குவரத்தை கையாளும் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் என்போர் பாதுகாப்பு நோக்கங்களுக்காக கடமையில் ஈடுபடவுள்ளனர்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










