பதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகமாக, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நிஷான் தனசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதியின் பொது மன்னிப்பை முறைகேடாகப் பயன்படுத்தி, கடந்த விசாக பூரணை தினத்தின் போது சிறைக் கைதிகள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை பதவி இடைநீக்கம் செய்யத் தீர்மானிக்கப்பட்டது.
குறித்த தீர்மானம் 09.06.2025 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










