2025 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 4.8 சதவீதமாக பதிவாகியுள்ளது.
தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிரகாரம், விவசாய நடவடிக்கைகள் 0.7 சதவீதமாக சரிவைப் பதிவு செய்துள்ளது.
இருப்பினும், தொழில்துறை மற்றும் சேவைப் பொருளாதார நடவடிக்கைகள் முறையே, 9.7 சதவீதமாகவும், 2.8 சதவீதமாகவும் வளர்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










