தென் மெக்சிகோவில் சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தில் ஒவ்வொரு ஆண்டும் வினோதமான திருமணம் நடைபெறுகிறது.
அதாவது, அந்த நகரத்தின் மேயருக்கும் உயிருள்ள முதலைக்கும் திருமணம் நடைபெறுகிறது.
கடந்த 230 ஆண்டுகளாக இந்த சடங்கு ஓக்ஸாகா மாநிலத்தின் இரண்டு பழங்குடி சமூகங்களின் கலாச்சாரங்களான சோண்டல் மற்றும் ஹுவாவே ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் மெக்சிகோ நாட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த சடங்கு சமூகத்திற்கு செழிப்பைக் கொண்டுவருவதாக நம்பப்படுகிறது.
இந்த ஆண்டு, மேயர் டேனியல் குட்டியர்ரெஸ் “இளவரசி பெண்” எனப்படும் பெண் கெய்மன் முதலையை திருமணம் செய்துள்ளார்.
பெண் கெய்மன் முதலைக்கு நகர மக்கள் மிகுலானா எஸ்டெலா டெல் மார் சவலேட்டா ராமிரெஸ் எனப் பெயர் சூட்டியுள்ளனர்.
முதலைக்கு மணப்பெண் போல வெள்ளை நிற ஆடை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
திருமணம் முடிந்ததை குறிக்கும் விதமாக மேயர் குட்டியர்ரெஸ் முதலைக்கு முத்தமிட்டுள்ளார். இது அவரது இனச் சமூகத்தின் மீது அவர் வைத்துள்ள அன்பையும் அர்ப்பணிப்பையும் குறிக்கிறது என தெரிவிக்கப்படுகிறது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










