இலங்கையில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவல், 95 சதவீதம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக, கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
அதன் படி, 2,500 பண்ணைகளில் 67,000 பன்றிகள் உயிரிழந்துள்ளன.
அத்துடன், பல பன்றிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில், நாடளாவிய ரீதியிலுள்ள பாதிக்கப்பட்ட பண்ணைகளில் 251 பண்ணைகள் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










