இலங்கைக்கான விமான சேவை, மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, ஆர்கியா இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் வரையறுக்கப்பட்ட விமான சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன் பிரகாரம், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் இருந்து கொழும்புக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23 ஆம் திகதி, ஆர்கியா இஸ்ரேலிய ஏர்லைன்ஸ், தமது சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் வாராந்தம் விமான சேவையை முன்னெடுக்கவுள்ளதாகவும், அதற்கான அட்டவணை வெளியிடப்படுமெனவும் ஆர்கியா இஸ்ரேலிய ஏர்லைன்ஸ் வரையறுக்கப்பட்ட விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










