உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு வசதியாக, 16.08.2025 அன்று “Ella Weekend Express” என்ற புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இயற்கை அழகை ரசித்துக் கொண்டே கொழும்பிலிருந்து பதுளைக்கு புகையிரதத்தில் பயணிக்க உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து கோரிக்கை எழுந்துள்ளது.
மேற்படி கோரிக்கைக்கு அமைவாக, வார இறுதி நாட்களில் “Ella Weekend Express” என்ற புதிய புகையிரத சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இத் புகையிரதம் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 5.30க்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்குப் பயணித்து, மறுநாள் பிற்பகல் 1.45க்கு பதுளையில் இருந்து புறப்பட்டு கொழும்பை வந்தடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









