புதிய பதிவாளர் நாயகம் இன்று கடமைகளைப் பொறுப்பேற்றார் !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

புதிதாக நியமிக்கப்பட்ட பதிவாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் (26.08.2025) இன்று அதிகார பூர்வமாகக் கடமைகளைப் பொறுப்பேற்றார்.

160 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பதிவாளர் நாயகம் திணைக்களத்தில், இந்தப் பதவியை வகிக்கும் முதல் பெண்மணி என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

2003 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாகச் சேவையில் இணைந்த சசிதேவி ஜலதீபன், முன்னர் திருகோணமலை மற்றும் திம்புலாகல பிரதேச செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.

தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, பொருளாதாரக் கொள்கைகள் இராஜாங்க அமைச்சு மற்றும் நிதி, மூலதனச் சந்தைகள் மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் இராஜாங்க அமைச்சு உள்ளிட்ட பல அமைச்சகங்களில் சிரேஸ்ட உதவிச் செயலாளராகப் பதவி வகித்துள்ளார்.

சமீபத்தில், அவர் திட்ட முகாமைத்துவம் மற்றும் மேற்பார்வை திணைக்களத்தின் பணிப்பாளராகப் பணியாற்றினார்.

மேலும், அவரது புதிய நியமனத்திற்கு முன்னர் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சில் மேலதிக செயலாளராகக் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects