உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் சிந்து முன்னேறியுள்ளார்.
பிரான்சின் பாரிசில் உலக பெட்மின்டன் செம்பியன்ஷிப் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் போட்டியில் இந்தியாவின் சிந்து மட்டும் பங்கேற்கிறார்.
ஏற்கனவே உலக செம்பியன்ஷிப்பில் இதுவரை அவர் தங்கம் உட்பட ஐந்து பதக்கங்களை வென்றுள்ளார்.
இந்த தடவையும் சாதித்தால், இந்தத் தொடரில் ஆறு பதக்கம் சென்ற உலகின் முதல் வீராங்கனை என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், நேற்று நடந்த முதல் சுற்றில், ஐரோப்பிய கனிஸ்ட செம்பியனான பல்கேரியாவின் கலோயனாவை சிந்து தோற்கடித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










