பொதுப்போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் அனைவரும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் போக்குவரத்து உரிமத்தைப் பெறுவது கட்டாயம் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க 20.09.2025 அன்று அம்பாறையில் நடைபெற்ற கூட்டமொன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந் நிலையில், தற்போது இயங்கும் பெரும்பாலான பேருந்துகளில் வாகன இருக்கை பட்டிகள் பொருத்தப்படவில்லை.
இருப்பினும் அவை கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுப்போக்குவரத்துத் துறையைப் பொறுப்புடன் கையாள வேண்டியது அவசியம் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










