பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

கடந்த சில மாதங்களாக நாட்டின் பல்வேறு பிரதேச செயலகங்களில் பரவி வரும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் மேலும் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளரால் இந்த வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, 1992 ஆம் ஆண்டு 59 ஆம் இலக்கம் கொண்ட விலங்கு நோய்கள் சட்டத்தின் கீழ் இலங்கையில் உள்ள அனைத்து மாவட்டங்களும் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் அபாயப் பகுதிகளாகவும், பன்றிகள் நோய் அபாய விலங்குகளாகவும் மேலும் அறிவிக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தமானி அறிவிப்பு ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைப்பட்டுள்ள நிலையில், அது முன்னதாகவே ரத்து செய்யப்படாவிட்டால் அல்லது அச் சட்டத்தின் பிரிவு 5(3) இன் படி செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்படாவிட்டாலோ அமுல்படுத்த திகதியிலிருந்து 03 மாதங்களுக்கு மிகாமல் செல்லுபடியாகும்.

அத்துடன் நோய் சூழ்நிலையைப் பொறுத்து காலத்தை நீட்டிக்க முடியும் என்று வர்த்தமானி அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் வர்த்தமானி அறிவிப்பிற்கு அமைய பன்றிக் காய்ச்சல் ஆபத்துப் பகுதிகளில் பரவுவதைக் கட்டுப்படுத்தவும் தடுக்கவும் பின்வரும் செயற்பாடுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

விலங்கு நோய்கள் சட்டத்தின் பிரிவு 5 (4) இன் கீழ், அனைத்து அவதானம் கொண்ட பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் அத்தகைய தயாரிப்புகள் அல்லது நோய்க்கிருமியால் மாசுபட்ட எதையும், 1999 டிசம்பர் 03, திகதி 1108/23 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட உத்தரவின் VII அமைப்புக்கமைய, பிரிவின் கால்நடை அலுவலரால் வழங்கப்பட்ட அனுமதியின்றி ஆபத்து பகுதிக்குள் அல்லது வெளியே ஏற்றிச் செல்லல், அகற்றல், எடுத்துச் செல்லல் அல்லது விரட்டப்படல்.

மேற்கண்ட பிரிவின்படி போக்குவரத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியின்றி இறைச்சிக்காக பன்றிகளை வெட்டுதல். இந்த உத்தரவில் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அனுமதியின்றி பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் நோய்க்கிருமியால் மாசுபட்ட எந்தவொரு தயாரிப்புகளையும் விற்பனை செய்தல், விற்பனைக்கு வழங்குதல், சேமித்தல் அல்லது விநியோகித்தல் மற்றும் பன்றி இறைச்சியிலிருந்து தயாரிப்புகளை உற்பத்தி செய்தல்.

இறந்ததாக அல்லது தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு விலங்கின் சடலத்தையோ அல்லது அதன் பகுதியையோ, தொடர்புடைய நோய்களால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எந்தவொரு விலங்கின் சடலத்தையோ அல்லது அதன் பகுதியையோ, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களில் உள்ள அறிவுறுத்தல்களின்படி தவிர, தண்ணீருடன் தொடர்புடைய எந்த இடத்திலோ அல்லது பிற விலங்குகளால் வேறு இடத்திற்கு அல்லது பகுதிக்கு கொண்டு செல்லக்கூடிய எந்த இடத்திலோ அப்புறப்படுத்துதல்.

இந்த உத்தரவில் நியமிக்கப்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியால் அங்கீகரிக்கப்பட்ட இறைச்சி கூடம்/கிடங்கு/இறைச்சி பதப்படுத்தும் மையம் தவிர வேறு இறைச்சி கூடம்/கிடங்கு/இறைச்சி பதப்படுத்தும் மையத்தில் இறைச்சி வெட்டுதல்/சேமித்தல்/தயாரித்தல்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects