மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு, மண்முனைமேற்கு பிரதேச செயலக கலாசாரப் பேரவையும் கலாசார அதிகார சபையும் இணைந்து ஏற்பாடு செய்த பிரதேச கலாசார விழாவும் கலை இலக்கிய பெருவிழாவும் பிரதேச செயலாளர் நமசிவாயம் சத்தியானந்தி தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதேச மட்டத்திலான கலை இலக்கியத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கான சந்தர்ப்பமாக மாணவர்களிடையே கவிதை, சிறுகதை, பாடலை நயத்தல், கதை சொல்லுதல் போன்ற போட்டிகளை பாலர், சிறுவர், கனிஷ்ட, சிரேஷ்ட, அதி சிரேஷ்ட ஆகிய பிரிவு மட்டங்களிலும், திறந்த பிரிவில் சிறுகதை, மரபு மற்றும் புதுக் கவிதை, சிறுவர் கதை, ஆக்கப் போட்டி மற்றும் திரைப்பட விமர்சனம் என்பன போன்ற பல போட்டி நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச கலை மன்றங்களின் பல்வேறு கலை நிகழ்வுகள் நிகழ்த்தப்பட்டதுடன், நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கான சான்றிதழ்கள் மற்றும் பரிசில்களும் வழங்கப்பட்டன.









இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










