சீரற்ற வானிலை காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியதற்கு அமைவாக இன்று (26.11.2025) தொடக்கம் எதிர்வரும் 30.11.2025 வரையான காலப்பகுதியில் அதிகளவிளான மழை வீழச்சி பதிவாகவுள்ளதாகவும் அதே சத்தர்பத்தில் காற்றின் வேகமானது மணிக்கு 50 கி.மீ தொடக்கம் 60 கி.மீ வரை வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மட்டக்களப்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.
இதே வேளை, மாநகர எல்லைக்குள் பலத்த காற்றினால் பிரச்சனைகள் ஏற்படும் சந்தர்ப்பத்தில் பின்வரும் இலக்கங்களை தொடர்பு கொண்டு தெரியப்படுத்துமாறும் மட்டக்களப்பு மாநகர சபை பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மாநகர முதல்வர் மாநகர சபை மட்டக்களப்பு :- 704271345
மாநகர ஆணையாளர் மாநகர சபை,மட்டக்களப்பு :- 779993244
அனர்த்த மற்றும் முன்னாயத்தக் குழுத் தலைவர் – மாநகர சபை,மட்டக்களப்பு :-759950509
அனர்த்த பிரிவு – மாநகர சபை, மட்டக்களப்பு :- 0652222222



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










