மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கிருமிச்சை ஓடை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 20.12.2025 அன்று பாடசாலையில் நடைபெற்றது.
குறித்த கற்றல் உபகரணங்கள் 7000 ரூபாய் பெறுமதியானதுடன் அவை சிங்கப்பூர் வாழ் தமிழ் உறவுகளின் நிதி அனுசரணையில் அப் பாடசாலையைச் சேர்ந்த 26 மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இச் செயற்பாட்டினை 93 நண்பர்கள் அமைப்பு இணைப்பாளர்களால் செயல்பட்டு நடைமுறைப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










