இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் பூரி நகரில் உள்ள நிலாத்ரி கடற்கரையில், அப்பிள் பழங்களை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட கிறிஸ்மஸ் தாத்தா உருவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இந்தியாவின் ஒடிசாவைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். பிரபல மணல் சிற்பக் கலைஞரான இவர், நத்தார் பண்டிகையை முன்னிட்டு, நிலாத்ரி கடற்கரையில் அப்பிள் பழங்களை பயன்படுத்தி கிறிஸ்துமஸ் தாத்தா உருவத்தை அமைத்துள்ளார்.
ஒன்றரை தொன் அப்பிள் பழங்களைக் கொண்டு, 60 அடி நீளம், 22 அடி உயரம் மற்றும் 45 அடி அகலத்தில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நத்தார் தாத்தா உருவம், உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.



இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










