2025 (2026) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர (சாதாரண தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காகப் பரீட்சகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.ஜே.எஸ். இந்திகா குமாரி லியனகே விடுத்துள்ள விசேட ஊடக அறிவித்தலில் இது குறித்த விபரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் https://onlineexams.gov.lk/eic என்ற இணையத்தள முகவரியூடாக மாத்திரமே இணையவழி (Online) முறையில் விண்ணப்பிக்க முடியும்.
இதற்கான விண்ணப்பங்கள் கடந்த 25.12.2025 அன்று முதல் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் நாளைய தினம் (08.01.2026) இதற்கான இறுதி நாளாகும் என பரீட்சைகள் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










