இனிவரும் காலங்களில் இலங்கை போக்குவரத்து சபையின் பதவிகளுக்கு ஊழியர்களை உள்வாங்கும் நடவடிக்கைகள், தகைமைகள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படும் எனப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
அனைத்து பதவிகளுக்குமான ஊழியர் உள்வாங்கல் செயன்முறையை முறைப்படியாக மேற்கொள்வதே இதன் நோக்கம் என அவர் சுட்டிக்காட்டினார்.
அதன் அடிப்படையில், எதிர்வரும் சில நாட்களில் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து இலங்கை போக்குவரத்து சபையின் பிராந்திய அலுவலகங்களிலும் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் எனப் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன மேலும் குறிப்பிட்டார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










